புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர்

புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர்

முதலார் முதல் நாகர்கோவில் வரை புதிய அரசு பேருந்து சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.


முதலார் முதல் நாகர்கோவில் வரை புதிய அரசு பேருந்து சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

வேர்கிளம்பி பேரூராட்சியில் முக்கிய கிராம பகுதியான முதலார் பரளியாற்றின் கரையோரம் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் பல குக்கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல தக்கலை செல்லும் பஸ் உள்ளது. அதனை தவிர்த்து பஸ் பயணத்துக்கு திரு வட்டார் அல்லது பூவன்கோடு பகுதிகளுக்கு சென்று பஸ் ஏற வேண்டும். இதனால் முதலார் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக் கள் 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுவரையிலும் யாரும் கண்டு கொள்ளாத நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை தீர்வு காணும் வகையில் அமைச்சர் மனோதங்கராஜ் இதற்கு நடவடிக்கை எடுத்தார். தற்போது காலை, மாலை என இரண்டு முறை முதலார் -நாகர்கோவில் இடையே பஸ் இயக்கப்படுகிறது. இதனை அமைச்சர் மனோதங்க ராஜ் தொடங்கி வைத்தார். பொது மக்களின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதை பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story