நீரோடியில் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர்

நீரோடியில் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர்

புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர் 

நீரோடி மீனவ கிராமத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புதிய அரசு பேருந்து சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட நீரோடி முதல் நித்திரவிளை, புதுக்கடை, தொலையாவட்டம். கருங்கல், திக்கணங்கோடு, திங்கள்நகர், குருந்தன்கோடு, ஆசாரிப்பள்ளம் வழியாக நாகர்கோவில் செல்லும் புதிய பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட முதலார் முதல் நாகர்கோவில் வரையிலான புதிய பேருந்து சேவையினையும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இச்சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி. துணை மேலாளர் ஜெரோலின், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை அலுவலர்கள்.பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story