புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்

வேளச்சேரியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ,அடையாறு மண்டலம், வார்டு-178க்குட்பட்ட வேளச்சேரி, தரமணியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் 2022-23ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, கூடுதல் தலைமைச் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ஆனந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story