புதிய கட்டடங்களில் திறந்து வைத்து விளக்கேற்றிய அமைச்சர்

புதிய கட்டடங்களில் திறந்து வைத்து விளக்கேற்றிய அமைச்சர்

புதிய கட்டடங்களில் திறந்து வைத்து விளக்கேற்றிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட புதியவகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்துவைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பள்ளத்திவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story