புதிய நியாயவிலைக் கடை அமைச்சர் திறந்து வைத்தார்

புதிய நியாயவிலைக் கடை  அமைச்சர் திறந்து வைத்தார்

புதிய நியாயவிலைக் கடை அமைச்சர் திறந்து வைத்தார்

விஜயாபுரி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் - விஜயாபுரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றியக் கழக செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்க மாரியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகக்கனி இந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதி ரவிக்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தாமோதரக் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story