திருப்பூரில் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருப்பூரில் ரயில்வேமேம்பாலத்தை மாநிலபொதுப்பணித்துறைநெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறைஅமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருப்பூரில் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளை இணைக்கக்கூடிய ரயில்வே மேம்பாலத்தை மாநில பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு திறந்து வைத்தார். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதிகளை இணைக்கக்கூடிய வகையில் புஷ்பா ரவுண்டானா அருகே ஒரே ஒரு மேம்பாலம் மட்டும் இருந்து வந்தது. ரயில்வே தண்டவாளத்தை கடந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதியில இணைக்கக்கூடிய வகையில் ஒரே ஒரு பாலம் மட்டும் இருந்ததன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனை கருத்தில் கொண்டு திருப்பூர் ஊத்துக்குளி சாலை எஸ் ஆர் சி மில் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு 524 மீட்டர் தூரத்திற்கு ஊத்துக்குளி சாலை எஸ் ஆர் சி மில்லில் இருந்து வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோல்டன் நகர் வரை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் திட்ட அறிக்கை மாற்றப்பட்டதன் காரணமாக பணி காலதாமதமான நிலையில் பால கட்டுமான பணிகள் முடிந்த இன்று திறப்பு விழா காணப்பட்டது.

மாநில பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மாநகராட்சி மேயர் , சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Tags

Next Story