நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர்

நியாய விலை கடையை திறந்து வைத்த அமைச்சர்
நியாய விலை கடை திறப்பு 
புதுக்கணக்கை மாவட்டம் கும்மங்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை அமைச்சர் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கும்மங்குடி ஊராட்சி, தெற்கு பொந்துப்புளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story