யானைக்கவுனி மேம்பால சாலையை திறந்து வைத்த அமைச்சர்

யானைக்கவுனி மேம்பால சாலையை திறந்து வைத்த அமைச்சர்

சாலை திறப்பு 

யானைக்கவுனியில் ரூ 71.26 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலத்தில் முடிவுற்ற ஒருவழிப்பாதையினை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் , இராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட யானைக்கவுனி பகுதியில் ரூ.71.26 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் முடிவுற்ற ஒருவழிப் பாதையினை இன்று (15.03.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். மேயர் பிரியா, இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி. எஸ். சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் பிரவீன் குமார், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு) மண்டலக் குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story