தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு பந்தலை பார்வையிட்ட அமைச்சர், எம்.பி.

தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு பந்தலை பார்வையிட்ட அமைச்சர், எம்.பி.

மாநாட்டு பந்தலை பார்வையிட்ட அமைச்சர், எம்பி

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதற்காக பந்தல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநாட்டு பந்தலை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் அமைச்சர் முத்துசாமி, மாநில துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஜோயல், சீனிவாசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் அன்பு, மூர்த்தி, சிவராமன், பேரூர் செயலாளர் வெங்கடேஷ், பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story