அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்

அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போக்கவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.7.44 லட்சம் மதிப்பீட்டில் 148 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்த, இந்நிகழ்கியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, துணைத்தலைவர் முத்தமிழ்ச் செல்வி மதியழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை ஜெகநாதன் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், டாக்டர் கருணாநிதி, குன்னம் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் . பிரியா உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story