கோவிலில் நாள் முழுவதும் அன்னதானத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

கோவிலில் நாள் முழுவதும் அன்னதானத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
அன்னதானத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தைகிருத்திகையை முன்னிட்டு நேற்று திருப்போரூர், கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடு அரங்குகளை பார்வையிட்டு, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும், கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகளின் போது, செங்கல்பட்டு சார் ஆட்சியர் வி.எஸ்.நாராயண சர்மா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் எம்.தேவராஜ், கோவில் செயல் அலுவலர் கே.குமர வேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story