மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முகாமை பார்வையிட்ட அமைச்சர்!

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் முகாமை அமைச்சர் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நகரத்தார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பதிவு செய்யும் முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்.

அருகில் கலெக்டர் மெர்சிரம்யா, டிஆர்ஓ செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் 13 துறைகளின் சேவைகள் எளிதில் தாமதம் இன்றி கிடைக்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.

Tags

Next Story