நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

சாத்தூரில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கிராமங்களில் நலத்திட்ட பணிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்த நிலையில் செயல்பாட்டிற்காக காத்திருந்த அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

முத்துச்சாமிபுரம் நெல்மேனி பெரிய ஓடைப்பட்டி என். சுப்பையாபுரம் முள்ளிச்செவல் (சமத்துவபுரம்) உப்பத்தூர், தோட்டி லோவான்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக வருவாய் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லோகநாதன் வட்டாட்சியர் சிவக்குமார் ஒன்றிய பெருந்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ் நகர் மன்ற சேர்மன் குருசாமி மற்றும் திமுக கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகேசன் மற்றும் கடற்கரை ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்,

கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அமைச்சரை சந்தித்து தங்களது குறைகளையும் தெரிவித்தனர் அதற்கு அமைச்சர் உங்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Tags

Next Story