பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்

பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்

  ரங்கம்பாளையத்தில் நடந்த விழாவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ரங்கம்பாளையத்தில் நடந்த விழாவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு ரங்கம்பாளையம், டாக்டர்.R.A.N.M கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் , வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக பெற்றுள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 160 க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் வகையில் இம்முகாம் நடைபெற்றது. மேலும் மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story