புதிய கலை அரங்கத்தினை திறந்து வைத்த முன்னால் அமைச்சர்!

புதுக்கோட்டையில் புதிய கலை அரங்கத்தினை முன்னால் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திருவேங்கைவாசல் ஊராட்சி கிளாப்பட்டியில் விராலிமலை சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 5.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தினை முன்னாள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் திறந்து வைத்து, நடைபெற்ற சிறுவர்களின் நடனத்தையும் பார்வையிட்டார்கள்.

Tags

Next Story