கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

கிரிக்கெட் போட்டி 

இ.கே.புதூர் கிராமத்தில் 8 -ஆம் ஆண்டு கிரிக்கெட் விழாவில் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி எம்எல்ஏ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதி ,நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட இ.கே.புதூர் கிராமத்தில் 8 -ஆம் ஆண்டு கிரிக்கெட் விழாவில் இறுதி போட்டி நேற்று மாலை வெகு விமரிசியாக நடைபெற்றது.

இந்த இறுதி போட்டியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாஸ் போட்டு ஆட்டத்தை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம மக்கள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story