திருப்பூரில் மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தினை தொடங்கி வைத்த எம்எல்ஏ

திருப்பூரில் மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தினை தொடங்கி வைத்த எம்எல்ஏ

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ


திருப்பூரில் மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தினை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் மக்களுடன் முதல்வர் முகம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு 43 பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் முகாமினை தெற்கு ரோட்டரி திருமண மண்டபத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் ஆகியோர் துவக்கி வைத்து

பொதுமக்களின் கோரிக்கைகளை அவர்களின் இருப்பிடத்திலேயே நிவர்த்தி செய்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கி பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பன்வர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், உதவி ஆணையாளர் வினோத், 43- வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி ,துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story