குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ !

மதுரவாயல் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-145 & 148 நெற்குன்றம் மேட்டுக்குப்பம் மற்றும் பல்லவன் நகர் பகுதிகளுக்கான விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன்., மாமன்ற உறுப்பினர் கிரிதரன்., வட்ட கழக செயலாளர் சி.சுந்தர்,மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ரவி,கர்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story