கபடி போட்டியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

சென்னை மதுரவாயல் பகுதியில் கபடி போட்டியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்கு பகுதி, 152வது திமுக வட்ட செயலாளர் அப்பன்(எ) சத்தியமூர்த்தி சார்பில் மார்ச் 1.ல்.பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு நாள் தொடர் கபடி போட்டி வளசரவாக்கம் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடலில் நடைபெற்ற இறுதி கபடி போட்டியை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் வ. செல்வகுமார், மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், பகுதி நிர்வாகிகள் இரா. பால்பாண்டியன்,கே.ராஜி, வட்ட செயலாளர் ராதா செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story