புதிய அங்கன்வாடி கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மதுரவாயலில் ,ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதியஅங்கன்வாடி மையம் திறப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-154, இராமாபுரம், கங்கையம்மன் கோயில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C., பொதுக் குழு உறுப்பினர் வ.செல்வகுமார், M.C., பகுதி துணை செயலாளர் இரா.பால்பண்டியன், மாவட்ட அமைப்பாளர் V.ராஜேஷ், மாவட்ட துணை அமைப்பாளர் செ.ரவி, மாமன்ற உறுப்பினர் கே.ராஜி, M.C., வட்ட கழக செயலாளர் ஆ.ராதாசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் M.L.நாதன், A.D.எத்திராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story