பூந்தமல்லி :பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் எம்எல்ஏ

பூந்தமல்லி  :பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் எம்எல்ஏ

பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் எம்எல்ஏ

மழையால் பாதிப்பட்ட இடங்களையும் ஆய்வு செய்தார்
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சி பகுதியில் புதியதாக 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சித்தா அவன்யூ பூங்காவை பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து துப்புறவு பணியாளர்களுக்கான ஓய்வறை, பேரூந்து நிலையத்தில் கழிப்பறை ஆகியவற்றைகளையும் சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி திறந்து வைத்தார். இதனை அடுத்து, தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மழையால் பாதிக்கப்பட்ட சுந்தர் நகர், கல்லறை நகர், மற்றும் பல்வேறு இடங்களையும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்க்கொண்டு மக்களுடைய தேவைகளை உடனிடியாக நிவர்த்தி செய்திடவேண்டும் எனவும் அதிகாரிகளிடத்தில் ஆணையிட்டார். இந்நிகழ்ச்சியில் நகர செயாலளர் திருமலை, நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், நகர மன்ற துணைதலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story