அரசு பள்ளியை ஆய்வு செய்த எம்எல்ஏ

அரசு பள்ளியை ஆய்வு செய்த எம்எல்ஏ

அரசு பள்ளியை ஆய்வு செய்த எம்எல்ஏ

அரியலூர் மாவட்டம் உதயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கோடாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம் உதயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கோடாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 லட்சம் மதிப்பீட்டில் வழங்கபட்ட ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்பறையினை ஆய்வு செய்தார். மேலும் மாணவ, மாணவிகள் சாப்பிடும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதனையடுத்து அப்பள்ளி வளாகத்தில் கட்டபட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இதில் அப்பள்ளி தலைமையாசிரியர் இளையராஜா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story