உத்தரவாதம் அளித்த எம்.எல்.ஏ - மீனவர் போராட்டம் வாபஸ்

சட்ட போராட்டம் நடத்தி மீனவர்களை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அளித்த உத்தரவாதத்தை ஏற்று இரண்டு நாட்களாக மீனவர் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லதாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு முன்வைத்து மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றது. இந்த நிலையில் படகோட்டிகளுக்கு ஆறு மாத சிறையும், இரண்டாவது முறையாக எல்ல தாண்டி குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதித்து வருவதால் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவர் போராட்டத்திற்கு வருகை தந்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை சட்டரீதியான நீதிமன்றத்தில் முறையிட்டு மீட்டு கொடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டதை அடுத்து மீனவர்கள் இரண்டு நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிராத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Tags

Next Story