மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது - சீதாராம் யெச்சூரி

மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது -  சீதாராம் யெச்சூரி

கோவையில் நடந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது என கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக.,வுக்கும் சாதகமாக கருத்துக் கணிப்புகள் அமைந்திருக்கிறது. எல்லா கருத்துக்கணிப்பு முடிவுகளும் பாஜக.,வுக்கு சாதகமாக இல்லை எனவும் சில மாநிலங்கள் சாதகமாக இருப்பதாகவும் சில இவை மாறுதலுக்கு உட்பட்டதா என்பதை தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் கீழ் இந்தியாவில் வேலை இழப்புகள் அதிகரித்துள்ளது எனவும் அதே வேலை பணவீக்கமும் அதிகமாக உள்ளதால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பிரச்சனை பிரதிபலிக்கும் என்றார். பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்கள், சிறுபான்மையினர்கள், பழங்குடியினர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர் என்றவர், மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஜி 20 மாநாட்டில் இந்தியா தலைமை வகித்ததால் முன்னிலை வகிப்பதாக பிம்பம் கட்டமைக்கப்பட்டது எனவும் ஆனால் ஜி.டி.பியில் 20வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் இந்தியா உள்ளது என தெரிவித்தவர், யுனெஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஒன்றிய அரசு விரைவில் பதில் அளிக்க வேண்டும் என்றார். இந்திய நாட்டு மக்களுக்காகவும் இந்தியாவுக்காக பாசிச சக்தியான பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்றவர் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் தமிழகத்தில் கூட்டணி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை எட்டும் என்றவர் இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என்றவர் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சிகளை மிரட்ட ஒன்றிய அரசு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். கேரளாவில் எட்டு மசோதாக்களை கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறார். ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது எனவும் சாதிவாரி கணக்கெடுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதாகவும் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே சமத்துவம் மற்றும் சமூக நீதியை நிலை நிறுத்த முடியும் என தெரிவித்தார்.

Tags

Next Story