மகனை குளத்தில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலை

ராமநாதபுரத்தில் தனது ஆறு வயது மகனை குளத்தில் தள்ளி விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு திருமணம் ஆகி வனிதா என்ற மனைவியும் லிகாஸ் (6) என்ற மகனும் உள்ளனர். செல்வராஜ் கத்தார் நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மீண்டும் பணிக்காக கத்தார் நாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வனிதா வீட்டிற்கு அருகாமையில் உள்ள குளத்தில் தனது மகன் லிகாசை வீசி எறிந்து கொலை செய்து விட்டு அவரும் குளத்தில் விழுந்து தற்கொலை செய்ள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தாய் மற்றும் மகன் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்


Tags

Next Story