கிணற்றில் தவறி விழுந்த தாய் உயிரிழப்பு !

கிணற்றில் தவறி விழுந்த தாய் உயிரிழப்பு !

 உயிரிழப்பு

பாடாலூர் அருகே 2 வயது குழந்தையுடன் உடன் குளிக்கச் சென்ற தாய் கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ரம்யா வயது 26, இவர்களுக்கு அதிரூபன் 2 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மாலை ரம்யா அவருடைய வயலில் உள்ள கிணற்றில் குளித்து, துணி துவைத்துவிட்டு வருவதற்காக குழந்தையுடன் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் ரம்யாவை தேடி வினோத் வயலுக்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகே குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்தது. இதையடுத்து அருகில் உள்ள காட்டிற்கு சென்று ரம்யாவை, வினோத் தேடியுள்ளார். ஆனால் அவர் கிடைக் காததால், கிணற்றில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்த வினோத், இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார்.

தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடி னர். இதில் ரம்யாவை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். அவரது உடலை பாடாலூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காகபெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story