நகராட்சிமன்ற கூட்டம் பாதியிலேயே நிறுத்தம்

குன்னூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதையடுத்து கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நகர மன்றத் தலைவர் வாசீம் ராஜா, பொறுப்பு ஆணையாளர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தெருவிளக்கு, சாலை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் குன்னூரில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட பள்ளியின் அருகே காவல் துறையினர் சோதனை செய்ய வேண்டும் என அ.தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கை வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., கவுன்சிலருக்கும் அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் கூட்டம் பாதியில் முடிந்தது.

Tags

Next Story