தூய்மை பணியாளர்களை மகிழ்வித்த நகர மன்ற தலைவர்

உழைப்பாளார் தினத்தை முன்னிட்டு திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
திருச்செங்கோடு நகராட்சி ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் 250 பேருடன் மே தினத்தை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடி தொழிலாளர்களுக்கு எட்டி மடையில் உள்ள பிவிஎஸ் ஏசி திரையரங்கத்தில் ரோமியோ திரைப்படம் காண்பித்த திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர்ஷாலினி சுரேஷ் பாபு. விடுமுறை தினத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏசி திரையரங்கத்தில் திரைப்படம் பார்த்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், சினேகா ஹரிஹரன், ரமேஷ், திவ்யா வெங்கடேஸ்வரன்,திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story