அலங்கோலமாக கிடக்கும் ரோட்டை கண்டுகொள்ளாத பேரூராட்சி

அலங்கோலமாக கிடக்கும் ரோட்டை கண்டுகொள்ளாத பேரூராட்சி

வாகன ஓட்டிகள் கடும் அவதி  

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் நால் ரோட்டில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் நால் ரோட்டில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது .வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கண்டுகொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: ரோடு அலட்சியமாக இருப்பதால் விபத்துக்கள் நடந்து வருகின்றன. பொதுமக்களின் நலனை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.பேரூராட்சி நிர்வாகத்திற்கு வரி வசூல் மட்டுமே முக்கியமாக கருதப்படுகிறது மக்களின் நலன் கருதுவதில்லை. இவ்வாறு பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story