விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் செயின் பறித்த மர்ம நபர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் செயின் பறித்த மர்ம நபர்.

காவல் நிலையம் 

நித்திரவிளை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் செயினை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஜிதா.அவரது தாயாரின் வீடு நித்திரவிளை அருகே சின்னத்துறை கே.ஆர்.புரம் பகுதியில் உள்ளது.இவர் தனது 9 வயது மகளுடன் தாயார் வீட்டுக்கு வந்து உள்ளார். இரவு குடும்பத்தினருடன் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, 9 வயது மகள் உறவினர் குழந்தைகளுடன் வீட்டின் முன்னால் உள்ள சாலையில் இரவு சுமார் 8 மணியளவில் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் ஸ்கூட்டியில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், சிறுமியிடம் உன் ஊர் எங்கே என்று கேட்டு விட்டு, சிறிது தூரம் சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து சிறுமியின் கழுத்தில் இருந்த ஒரு சவரன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றார்.. இது தொடர்பாக அஜிதா நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story