தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை வெட்டி வீசிய மர்ம நபர்

தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை வெட்டி வீசிய மர்ம நபர்

வெட்டி வீசப்பட்ட தென்னங்கன்றுகள் 

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தங்காயூர் ஊராட்சியிலுள்ள கோனங்குட்டையூர் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற வனத்துறை பணியாளர் துரைசாமி தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை பயிரிட்டு அதனை பரமரித்து வந்துள்ளார்.கடந்த 20ந் தேதி மாலை தோட்டத்திற்கு சென்று பார்த்து விட்டு வந்தவர் மறுநாள் 21ந்தேதி காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அனைத்து தென்னங்கன்றுகளும் வெட்டி அங்குள்ள விவசாயக் கிணற்றில் வீசிபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் விவசாயத் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த தென்னை கன்றுகளை வெட்டி விவசாயக்கிணற்றில் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story