வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவர் மாயம்

வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவர் மாயம்

காவல்துறை விசாரணை


புதுக்கடை அருகே வீட்டில் இருந்து வெளியே சென்ற முதியவர் மாயம். போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி மதில்துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன். சற்று மனநலம் பாதித்தவரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. யாசகம் செய்து பிழைக்கும் இவர், வீட்டில் இருந்து அடிக்கடி வெளியே சென்றாலும் சில நாட்களில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதிகாலை 10 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் மகேஷ்வரன் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது சகோதரி சுதா என்பவர் புதுக்கடை போலீசில் மாயமான வரை கண்டுபிடித்து தரகோரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story