மனு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்

மனு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்

இறந்த முதியவர்

மனு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி(83).இன்று ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததுள்ளார்.இதனை கண்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அருகில் இருந்து மக்கள் அவரை அருகில் ஓரமாக அமர வைத்து 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த ஊழியர்கள் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் முன் முதலுதவி அளிக்க முயன்றபோது அவர் மரணமடைந்து விட்டார் என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து பந்தய சாலை போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டதை தொடர்ந்து அங்கு வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு கூடியிருந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story