ஆடுகள் காணாமல் போனதை கண்டுபிடிக்க போஸ்டர் அடித்து ஓட்டிய உரிமையாளர் !

ஆடுகள் காணாமல் போனதை கண்டுபிடிக்க போஸ்டர் அடித்து ஓட்டிய உரிமையாளர் !

போஸ்டர்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் காணாமல் போனதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஆட்டின் உரிமையாளர் போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளார்.திருவள்ளூரில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதயை சேர்ந்தவர் கார்த்திக் (38). கடந்த 26-ஆம் தேதி இவருக்கு 13 ஆடுகளை தமது வீட்டிற்கு அருகே உள்ள சுடுகாடு பகுதியில் காலை அவரது தாய் தேவகி மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். பின்னர் மதிய நேரம் ஆனதால் தேவகி ஆடுகளை அங்கேயே மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீட்டிற்கு மதிய உணவுக்கு வந்துள்ளார். மதிய உணவை முடித்த பின் சுடுகாடு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த குட்டியை இயன்ற 2 ஆடுகள் காணாமல் போனதை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அவர் ஆடுகள் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த கடம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆடு கண்டுபிடித்து தர புகார் செய்த நிலையில், இதுவரை கண்டுபிடித்து தராததால் ஆட்டின் புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஓட்டி ஆடுகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டி உள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story