இருசக்கர வாகனத்தை காணவில்லை - உரிமையாளர் புகார்

இருசக்கர வாகனத்தை காணவில்லை - உரிமையாளர் புகார்
இருசக்கர வாகனத்தை காணவில்லை காவல் நிலையத்தில் உரிமையாளர் புகார்
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கள் பகுதியில் இருசக்கர வாகனத்தை காணவில்லை காவல் நிலையத்தில் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கள் பகுதியைச் சார்ந்தவர் வெங்கடேஷ் வயது 34 இவர் சிவகாசியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருவதாகவும் கடந்த 30 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் இரவு 10 மணி 30 நிமிடம் அளவில் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றதாக கூறப்படுகிறது.

மறுநாள் மே ஒன்றாம் தேதி காலை வீட்டு வாசலுக்கு வந்து பார்த்த பொழுது வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வாகனத்தை பல்வேறு பகுதிகளில் தேடி உள்ளார். வாகனம் கிடைக்காத காரணத்தால் நேற்று மூன்றாம் தேதி திருத்தங்கள் காவல் நிலையத்தில் காணாமல் போன தனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தர வேண்டி புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் திருத்தங்கள் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story