ரயிலில் பயணித்தவர் மர்ம மரணம்

ரயிலில் பயணித்தவர் மர்ம மரணம்

பைல் படம் 

சென்னையில் இருந்து ரயில் மூலம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூருக்கு வந்தவர் விருதுநகர் ரயில் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து அவருடைய உறவினர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் வடக்கு பஜார் பகுதியைச் சார்ந்தவர் கொண்டது சாமி வயது 51 இவருடைய மனைவி அனுசுவாதி கொண்டல் சாமி கடந்த 28ஆம் தேதி மாலை சென்னை வசிக்கும் தனது தங்கையை பார்ப்பதற்காக சென்னை சென்றதாக கூறப்படுகிறது அதைத்தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து கொண்டன்சாமியின் தங்கை அவரை ரயிலில் ஏற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து அவர் 31ஆம் தேதி வரை வீட்டிற்கு வராததை அடுத்து ரயில் நிலையம் சென்று விசாரித்த பொழுது கொண்டல் சாமி விருதுநகர் ரயில் நிலையத்தில் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது அதைத் தொடர்ந்து கொண்டல் சாமியின் உறவினர்கள் விருதுநகர் ரயில் நிலையம் வந்து விசாரித்துவிட்டு மேற்கு காவல் நிலையத்தில் கொண்டல்சாமியின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய கோரி புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story