அவர்மீது நடவடிக்கை எடுங்க - போலீசாரிடம் முறையிட்ட கிராம மக்கள்

அவர்மீது நடவடிக்கை எடுங்க - போலீசாரிடம் முறையிட்ட கிராம மக்கள்

புகார் அளித்த கிராம மக்கள் 

குமாரபாளையம் அருகே கும்பாபிஷேகம் நடத்த தடை செய்யும் நபர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் நல்லாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் இதற்கு இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story