பற்றி எரிந்த தீ - அணைக்க சென்றவர்கள் சிலிண்டர் வெடித்து காயம்

பற்றி எரிந்த தீ - அணைக்க சென்றவர்கள் சிலிண்டர் வெடித்து காயம்

விபத்து நடந்த வீடு 

துறையூர் அருகே வீட்டில் பற்றிய தீயை அணைக்க முயன்ற போது சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நோபில். இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது வீட்டிலிருந்து திடீரென கரும் புகை வந்ததால் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமராஜ், விஜய், கார்த்திக் ஆகிய மூவர் மற்றும் வீட்டின் உரிமையாளர் நோபில் ஆகிய நால்வரும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.இதில் தீயை அணைக்க முயன்ற வீட்டின் உரிமையாளர் நோபில் உட்பட நால்வரும் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற உப்பிலியபுரம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.காயமடைந்த நால்வரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் படுகாயம் அடைந்த வீட்டின் உரிமையாளர் நோபில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் தீ விபத்து எப்படி ஏற்ப்பட்டது என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தீயை அணைக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் நால்வரும் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story