தீ விபத்தில் சிக்கியவர் பலி

தீ விபத்தில் சிக்கியவர் பலி

காவல் நிலையம்

மனநிலை பாதிக்கப்பட்டவர் எதிர்பாராதவிதமாக உடலில் தீ பற்றி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வீரபாண்டி அருகே லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் அவர் கடந்த 26 ஆம் தேதி அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று இருந்தார். அங்கு விளக்கில் அவர் எண்ணெய் ஊற்றும் போது அவரது உடலில் தீ பற்றியது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story