விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

காவல் நிலையம் 

சின்ன சேலம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த வரதப்பனுாரைச் சேர்ந்தவர் ஜோதிவேல், 44; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 14ம் தேதி இரவு பைக்கில் சின்னசேலம் சென்றவர், லட்சியம் செல்லும் சாலையில் ஊராட்சி பெயர் பலகையில் மோதி சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். உடன் அவர் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நேற்று முன்தினம் இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story