தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே போதையில் கூலித் தொழிலாளியைத் தாக்கி பல்லை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த தொப்பையன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், 47; கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் காந்தி, 58; இருவரும் துக்க நிகழ்ச்சி நடந்த வீட்டில் குடிபோதையில் தகராறு செய்து தாக்கிக் கொண்டனர். அதில், பெருமாளின் 4 பல் உடைந்தது. உடன் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பெருமாள் மனைவி கனகராணி, 40; கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து காந்தியை கைது செய்தனர்.

Tags

Next Story