அருப்புக்கோட்டை அருகே ஆடுகளை எரித்த நபர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அருப்புக்கோட்டை அருகே ஆடுகளை  எரித்த நபர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கால்நடை வளர்ப்போர் சங்கம்

அருப்புக்கோட்டை அருகே ஆடுகளை தீ வைத்து எரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டி கிராமத்தில் முத்து ராக்கு மற்றும் அவருடைய கணவர் நல்ல கருங்கன் ஆகிய இருவரும் செம்பறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருவதாகவும்,

அதே பகுதியை சார்ந்த ஜெகன் என்பவர் அந்த ஊரைச் சார்ந்த மற்ற ஆடு மேய்க்கும் தொழிலாளர்களிடம் தரிசு நிலங்களில் ஆடுகளை மேய்ப்பதற்காக சட்டத்திற்கு புறம்பாக நபர் ஒருவரிடம் 2500 ரூபாய் என 68 நபர்களிடம் வசூல் செய்து இருப்பதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் முத்து ராக்கு அவருடைய கணவர் நல்ல கருங்கன் என்பவரின் 30 செம்பறி ஆட்டுக்குட்டிகளை கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி,

ஜெகன் மற்றும் கண்ணன் என்பவரின் தூண்டுதலின் பெயரில் சீனி என்பவர் தீவைத்து கொலை செய்ததாகவும் இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பாதிக்கப்பட்ட ஆடு மேய்க்கும் தொழிலாளர்களுடன் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் சக்தி சரவணன் என்பவர் உடன் மனு அளித்தனர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story