பெயிலில் வந்தவர் மீண்டும் ஜெயிலில் அடைப்பு!

பெயிலில் வந்தவர் மீண்டும் ஜெயிலில் அடைப்பு!

சிறையில் அடைப்பு 

கோவையில் ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் கைது.
கோவை:மருதமலை அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன்(56)சுயதொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் மகேஷ்(50) குடிபோதையில் அடிக்கடி ஜெயசந்தரனிடம் தகராறில் ஈடுபட்ட வந்த நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் மகேஷை கைது செய்து சிறையில் அடைந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் சம்பவத்தன்று ஜெயசந்திரன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மகேஷ் வெளியே நின்று தகாத வார்தைகளை திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் மகேஷை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story