சமையலுக்கு வந்தவர் வலிப்பு நோயால் உயிரிழப்பு

சமையலுக்கு வந்தவர்  வலிப்பு நோயால் உயிரிழப்பு

பைல்  படம்  

குமாரபாளையத்தில் சமையல் வேலைக்கு சென்றவர் வலிப்பு நோயால் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர், 27 . சமையல் கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் உள்ள மண்டபத்தில், சமையல் வேலைக்காக வந்தார். இவருக்கு நேற்று காலை 03:00 மணிக்கு திடீரென்று வலிப்பு வந்ததால், இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு, உடன் பணியாற்றும் நபர்கள் அழைத்து சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வழியில் இறந்து விட்டார் என்று கூறினார். குமாரபாளையம் உறவினர் வீட்டுக்கு வந்த இவரது தாயார், மகனை காண மண்டபம் வந்த போது, இச்சம்பவம் நடந்தது. இது குறித்து சேகரின் தாயார் மாரியம்மாள், 45, குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story