ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தியவர் சிகிச்சை பலனின்றி பலி

மயங்கி விழுந்த மகேஸ்வரன் 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்ட விவசாயி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே பெரிய பேராலி பகுதியைச் சார்ந்தவர் மகேஸ்வரன். இவர் அதே பகுதியைச் சார்ந்த வெங்கடேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட காலமாக குத்தகைக்கு விவசாயம் பார்த்த நிலத்தை வெங்கடேஸ்வரன் காலி செய்யச் சொன்னதால் மகேஸ்வரன் மற்றும் வெங்கடேஸ்வரன் ஆகிய இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மகேஸ்வரன் வெங்கடேஸ்வரன் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மகேஸ்வரன் விஷம் அருந்தி வந்துள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறிது நேரத்திலேயே மகேஸ்வரன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மயக்கம் அடைந்தார் உடனடியாக அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிச்சையில் இருந்த மகேஸ்வரன் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story