பைக்கில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

வடியாங்குப்பத்தை அர்ஜூனன், பைக்கில் இருந்து கீழே விழுந்ததால் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த வடியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அர்ஜூனன், 43; கடந்த 1ம் தேதி திருக்கோவிலுார் கடை வீதிக்கு பைக்கில் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் விழுந்து படுகாயமடைந்தார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார். இது குறித்து அவரது தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story