கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், ராசம்பாளையத்தில் மாடுகளுக்கு தழைகளை சேகரித்த போது தவறி கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ராசம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 55 வயதான முத்தையா. இவருக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கியதால் சரியாக நடக்க முடியாது. இந்நிலையில் கடந்த 4 ம் தேதி மாலையில் ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்று பகுதியில் தனது மாடுகளுக்கு தழைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார் இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த தீயனைப்பு வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய முத்தபாயை முத்தையாவை சடலமாக மீட்டனர். இது குறித்து தகவலறிந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சடலமாக மீட்ட முத்தையாவை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story