அம்மன் தாலியை திருடிய நபர் அதிரடி கைது

அம்மன் தாலியை திருடிய நபர் அதிரடி கைது

காளியம்மன் கோவிலில் திருட்டு 

திருவாரூர் மாவட்டம் அம்மன் தாலியை திருடிய நபர் அதிரடி கைது.
திருவாரூர் மாவட்டம் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்படி மன்னார்குடி நெடுவாக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மன் தாலியை திருடிய நபரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை செய்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தும் அம்மன் தாலியை திருடிய தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கோவிலூர் வள்ளிநகரை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடிய தாலி மற்றும் தாலி குண்டுகள் 6 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story