போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

குமார்

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில், பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக டிஎன்15 ஒய்3006 என்ற பதிவெண் கொண்ட ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கினை நிறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சோதனை செய்தார். அதில், பைக்கில் வந்தவர் புத்தந்துாரை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் குமார்,44; என்பதும், மதுபோதையில் இருந்ததும் தெரிந்தது.

இதனையடுத்து போக்குவரத்து போலீசார் குமாருக்கு அபராதம் விதித்தனர். இதனால் கோபமடைந்த குமார் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனை பணி செய்ய விடாமல் தடுத்து, அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், நான்குமுனை சந்திப்பு பகுதியில் சாலையின் குறுக்கே குமார் படுத்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் குமாரை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story