சீர் கொண்டு செல்லும் நிகழ்வு

சீர் கொண்டு செல்லும் நிகழ்வு

வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி சீர் கொண்டு செல்லுதல் நிகழ்வு நடைபெற்றது

வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி சீர் கொண்டு செல்லுதல் நிகழ்வு நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ராஜவீதி காவிரி கரையோரம் அமைந்துள்ள, ஆதிகேசவ பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதசி தின விழாவை ஒட்டி, காவிரி கரையோரம் உள்ள ஓம் காளி அம்மன் திருக்கோவிலில் இருந்து சீர் கொண்டு செல்லும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த சீரானது ஓம் காளி அம்மன் கோவிலில் இருந்து,காவிரி கரையோரம் உள்ள பெருமாள் கோவிலுக்கும், முருகன் கோவிலுக்கும், அம்மன் கோவிலுக்கும், தேவாங்க செட்டியார் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில், காவிரி கரையோரம் உள்ள காசி விஸ்வேஸ்வரர் கோவில், விநாயகர் கோவிலுக்கும் என ஐந்து கோவில்களுக்கு ஊர் பொதுமக்கள் அனைத்து சமுதாய மக்கள் சார்பாக ஒன்றாக கூடி சீர் கொண்டு செல்லப்பட்டது.. நிகழ்வை ஒட்டி ஆதிகேச பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது...

Tags

Next Story